Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தேர்தல் விஞ்ஞாபனங்களில் மதுசாரம், போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளில் திருப்தியில்லை

.

ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் புகையிலை, மதுசாரம் மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுக்காக உள்ளடக்கியிருக்கின்ற பரிந்துரைகள் தொடர்பில் திருப்தியில்லை என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC) தெரிவித்துள்ளது.  

இது தொடர்பாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் வெளியிட்டு செய்தியறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

09வது நிறைவேற்று ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்நிலையில், மதுசாரம், புகைப்பொருள் மற்றும் ஏனைய போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்காக விஞ்ஞான ரீதியான அடிப்படையில் 12 பரிந்துரைகள் கடந்த ஆகஸ்ட் 12ஆம் திகதி  மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தினால் இம்முறை போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு முனவைக்கப்பட்டது. 

தொடர்ந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், 06.09.2024 வரை வெளியிட்ட விஞ்ஞாபனங்களில் மதுசாரம், புகைப்பொருள் மற்றும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்கான கொள்கைகள் எவ்வாறு உள்ளடக்கப்பட்டுள்ளது என்கின்ற விஞ்ஞாபனப் பகுப்பாய்வை எமது நிறுவனம் மேற்கொண்டது. அப்பகுப்பாய்வானது கீழ்காணும் அட்டவணையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எமது அவதானிப்பின்படி, ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் புகையிலை, மதுசாரம் மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுக்காக உள்ளடக்கியிருக்கின்ற பரிந்துரைகள் தொடர்பாக இன்னமும் மகிழ்ச்சியடைய முடியாது. எனினும், சில வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்களில் இவை தொடர்பாக இணைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் பாராட்டப்படவேண்டியவையே. 

எமது நாட்டில் பிரதான பிரச்சினையாக அமையும் மதுசாரம், புகைத்தல் மற்றும் ஏனைய போதைப்பொருட்களின் பாவனையை கட்டுப்படுத்துவதானது, பொது மக்களின் சுகாதாரம், பொருளாதாரம், சமூகம் உட்பட சூழல் ஆகியவற்றை பாதுகாப்பதற்கு மிகவும் முக்கியமானதாக அமைகின்றது. 

ஆகவே நாட்டினதும் நாட்டு மக்களினதும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் கொள்ளைகளுடன் இப்பரிந்துரைகளையும் இணைத்துக்கொள்வார்கள் என நாம் நம்புகின்றோம். 

மேலும், இம்முறை தேர்தலினூடாக தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதி மதுசாரம், புகைப்பொருள் மற்றும் ஏனைய போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்கு மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை செயற்படுத்தி நாட்டில் மதுசாரம், புகைப்பொருள் மற்றும் ஏனைய போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்காக விரைந்து செயற்படுவார் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் எதிர்பார்க்கிறது என்றுள்ளது.