Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வாரிசு அரசியல்: மஹிந்த குடும்பத்தை எதிர்த்த மைத்திரி மகனை களமிறக்குகிறார்

.

 

திர்வரும் பொதுத் தேர்தலிலோ அல்லது ஜனாதிபதித் தேர்தலிலோ போட்டியிட எதிர்பார்க்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மாறாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் தனது மகன் தம்மசிறிசேன போட்டியிடவுள்ளதாகவும் அதற்கு தனது ஆசிகளையும் ஆலோசனைகளையும் வழங்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், தான் தீவிர அரசியலில் இருந்து விடைபெறவில்லை என்றும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னேற்றத்திற்காக தன்னால் இயன்றதை தொடர்ந்து செய்து வருவதாகவும் மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

2015ஆம் ஆண்டு பொது வேட்பாளராக களமிறங்கியிருந்த மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்ப ஆட்சியை கடுமையாக எதிர்த்தார்.

ஆனால், 2018ஆம் ஆண்டு மீண்டும் மஹிந்த ராஜபக்சவை பிரமராக நியமித்து இலங்கை மக்களுக்கு அதிர்ச்சியையும் அவர் அளித்திருந்தார்.

இந்த நிலையில் குடும்ப ஆட்சிக்கு எதிரான கருத்துகளை வெளியிட்ட மைத்திரிபால சிறிசேன, அவரது மகனை பொதுத் தேர்தலில் களமிறக்க உள்ளதாக தெரிவித்துள்ள கருத்து பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.