Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

200 புலனாய்வுப் பிரிவினரை களமிறக்கி நாட்டில் பேரழிவை ஏற்படுத்தத் திட்டமா?

.

இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 200 அதிகாரிகளை களமிறக்கி 12 ஆம் திகதிக்கு பின்னர் நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் திட்டம் இருப்பதாக வெளியான செய்திகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பிரதானி கடந்த புதன்கிழமை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வுப் பிரிவின் தலைவர் பிரிகேடியர் சந்திக மஹதந்திலவினால் கடந்த புதன்கிழமை காலை இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த செய்தியை வெளியிட்டுள்ள இந்த யூடியூப் சேனல் அரசியல் தேவைகளின் அடிப்படையில் தவறான தகவல்களை பரப்பி இராணுவத்தினரின் மன உறுதியையும் செயல்திறனையும் குலைக்க பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் சேவையை விட்டு விலகி வெளிநாட்டில் இருந்து யூடியூப் சேனலை நடத்தி வரும் அஜித் தர்மபால என்ற நபரால் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்துவதற்காக இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பிரதானியால் இருநூறு புலனாய்வுப் பிரிவினர் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தவறான செய்திகளால் தனக்கும் தனது குடும்பத்தின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் அரசியல் காரணங்களுக்காக நாட்டில் அமைதியின்மையை உருவாக்கி புலனாய்வு அமைப்புகள் மீது தேவையற்ற பழியை சுமத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு புலனாய்வுப் பிரிவின் பிரதானி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்துள்ளார்.