உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகிறது.
"மே 3, 2025 முதல் அமைதியான காலத்திற்குப் பிறகும் கூட, பிரதமர் அமரசூரிய தனது ஆதரவாளர்களை பிரச்சாரத்தில் ஈடுபட கூறியுள்ளார்!

உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகிறது. மாலை 4 மணிவரை வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. 339 உள்ளூராட்சி சபைகளுக்கு நடைபெறும் இந்த தேர்தலில் 70ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை புகைப்படம் அல்லது காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிடுவது தேர்தல் சட்டங்களை மீறும் செயல்களாகும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனவே, வாக்களிக்கும் சந்தர்ப்பங்களையும் வாக்குச் சீட்டுகளையும் புகைப்படம் அல்லது காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது கட்சியின் ஆதரவாளர்களை தேர்தல் பிரச்சார அமைதிக் காலத்திலும் பிரச்சாரம் செய்யச் சொன்னதன் மூலம் தேர்தல் சட்டங்களை மீறியதாக எழுந்த முறைப்பாட்டை விசாரிக்குமாறு இலங்கையின் முக்கிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பான சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை (PAFFREL) தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவுக்கு பஃப்ரல் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
"மே 3, 2025 முதல் அமைதியான காலத்திற்குப் பிறகும் கூட, பிரதமர் அமரசூரிய தனது ஆதரவாளர்களை பிரச்சாரத்தில் ஈடுபட ஊக்குவிப்பதாகக் கருதக்கூடிய ஒரு கருத்தை நாங்கள் கண்காணித்துள்ளோம். பிரதமரின் இந்தக் கருத்து, அவரது ஆதரவாளர்களை தேர்தல் சட்டத்தை மீற ஊக்குவிக்கும் செயலாகும், அதே நேரத்தில் அவர் சட்டத்தை புறக்கணித்துள்ளார்," என்று PAFFREL நிர்வாக பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான வீடியோ சமூக ஊடங்களில் பகிரப்பட்டு வருகிறது.