Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

பாகிஸ்தானில் சனத்தொகை அதிகரிப்பு; தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி!

.

பாகிஸ்தானில் சனத்தொகை வேகமாக அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

பாகிஸ்தானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிகள் சனத்தொகை அதிகரிப்பினால் மேலும் தீவிரமடைந்து வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

2017ஆம் ஆண்டில் 207.68 மில்லியனாக இருந்த அந்நாட்டு சனத்தொகை 2023ஆம் ஆண்டில் 241.49 மில்லியனாக அதிகரித்துள்ளமை அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த நிலைமை தொடருமெனின், 2050ஆம் ஆண்டளவில் பாகிஸ்தானின் சனத்தொகை 400 மில்லியனை தாண்டும் என தற்போது எதிர்வுகூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் சனத்தொகை அதிகரிப்பு அவதானமான ஒரு நிலையை உருவாக்கும் எனவும் அந்நாட்டின் வளங்கள் குறைவடைய நேரடியாக பாதிக்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, உணவு பாதுகாப்பு, சமூக மற்றும் பொருளாதார அடிப்படை தேவைகள், பொதுச் சொத்துக்களுக்கு விளைவு ஏற்படும் என கூறப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.