Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

சையத் ஹஷேம் சஃபிதீன் கொல்லப்பட்டார்; இஸ்ரேல் உறுதிப்படுத்தியது!

.

ஹிஸ்புல்லாவின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவின் வாரிசான சையத் ஹஷேம் சஃபிதீன் கொல்லப்பட்டதை இஸ்ரேல் செவ்வாயன்று (அக் 22) உறுதிப்படுத்தியது.

மூன்று வாரங்களுக்கு முன்பு பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் நடந்த தாக்குதலில் சஃபிதீன் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இது அவரது மரணத்தின் முதல் உறுதிப்படுத்தல் ஆகும்.

ஈரான் ஆதரவு பெற்ற லெபனான் போராளிக் குழுவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கடந்த மாதம் கொல்லப்பட்டார்.

“நாங்கள் நஸ்ரல்லா உள்ளிட்ட ஹிஸ்புல்லாவின் மூத்த தலைவர்களை கொன்றுவிட்டோம். இஸ்ரேலியர்களிள் பாதுகாப்பை அச்சுறுத்தும் எவரையும் நாங்கள் விடமாட்டோம்” என இஸ்ரேலிய இராணுவத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

யார் இந்த சையத் ஹாஷிம் சஃபிதீன்?

சையத் ஹஷேம் சஃபிதீன் நஸ்ரல்லாவின் உறவினர். அவர் ஹிஸ்புல்லாவின் ஜிஹாத் பேரவைக்கு நியமிக்கப்பட்டார், இது குழுவின் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பிரிவாகும்.

அத்துடன், போராளிக் குழுவின் நிதி மற்றும் நிர்வாக விவகாரங்களை மேற்பார்வையிடும்.

செப்டம்பர் 27 அன்று இஸ்ரேலால் நஸ்ரல்லா படுகொலை செய்யப்பட்டதில் இருந்து ஈரான் ஆதரவு இயக்கத்தை அதன் துணை பொதுச்செயலாளர் நைம் காசிமுடன் இணைந்து நடத்தி வருகிறார்.

2017 ஆம் ஆண்டில், அமெரிக்க வெளியுறவுத்துறை அவரை உலகளாவிய பயங்கரவாதியாக அறிவித்திருந்தது.

கடந்த ஆண்டில், இஸ்ரேலுடனான உக்கிரமான பகைமைகளுக்கு மத்தியில், ஹிஸ்புல்லா என்ற போராளிக் குழுவுக்காகப் பேசும் முக்கியப் பாத்திரத்தை சஃபிதீன் ஏற்றுக்கொண்டார்.

இந்த நேரத்தில், பாதுகாப்பு காரணங்களுக்காக நஸ்ரல்லாவிற்கு பதிலாக சஃபிதீன் முக்கிய உரைகளை ஆற்றியிருந்தார்.

ஒக்டோபர் 7, 2023 அன்று தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸின் தாக்குதலால் ஏற்பட்ட காசா போருக்குப் பின்னர், ஹிஸ்புல்லாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே பெரும் போர் வெடித்தது.

இதனையடுத்து சையத் ஹஷேம் சஃபிதீன் ஒரு பொதுவில் நிலைமை தொடர்பில் உரையாற்றிய முதல் ஹிஸ்புல்லா அமைப்பின் அதிகாரி ஆவார்.

தாக்குதலுக்கு மறுநாள் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய சஃபிதீன், ஹிஸ்புல்லாவின் “துப்பாக்கிகளும் எங்கள் ஏவுகணைகளும் உங்களுடன் (ஹமாஸ்) உள்ளன… எங்களிடம் உள்ள அனைத்தும் உங்களுடன் உள்ளன” என்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.