Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ரணிலை ஆதரிப்பவர்களின் எதிர்கால அரசியல் பயணம் நிச்சயமற்றதா?: சிங்கள நாளிதழ் கூறும் விளக்கம்

.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூலம் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் குணவர்தன உள்ளிட்ட மொட்டுக் கட்சி எனப்படும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்களின் எதிர்கால அரசியல் பயணம் மேலும் நிச்சயமற்ற நிலையில் இருப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் “தினமின” சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று (21) வெளியான பத்திரிகையில் குறித்த நிச்சயமற்ற நிலை தொடர்பில் பிரதான செய்தியொன்று வெளியாகியிருந்தது.

“ஜனாதிபதியை ஆதரிக்கும் மொட்டுக் கட்சி உறுப்பினர்களுடன் புதிய கட்சி” என்பதே அதன் தலைப்பாக காணப்பட்டது.

ஒரு துணைத் தலைப்பில், “தேர்தலுக்கு புதிய கட்சியில் இருந்து வேட்பாளர்களை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய கட்சியின் தலைவராக தினேஷ் குணவர்தனவும் செயலாளராக ரமேஷ் பத்திரனவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த சுமார் 100 உறுப்பினர்கள் இந்த புதிய கட்சியில் இணைந்துள்ளதுடன், ஜனாதிபதித் தேர்தலின் பின் இடம்பெறும் எந்தவொரு தேர்தலுக்கும் அந்தக் கட்சியில் இருந்து வேட்பாளர்களை முன்வைக்கப்படும் என “தினமிண” வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கின்றது.

எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சி பொதுத் தேர்தலில் வேட்புமனுக்களை வழங்காது என ரணில் விக்கிரமசிங்க அறிவித்ததையடுத்தே, தினேஷ் குணவர்தன உள்ளிட்ட ரணில் தரப்பின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் இந்த அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.