Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

5,000 கி.மீ தொலைவில் நோயாளி; அறுவை சிகிச்சை மூலம் நுரையீரலில் இருந்த கட்டியை அகற்றி மருத்துவர் சாதனை

.

சீனாவில் 5000 கி.மீக்கு தொலைவில் இருந்த மருத்துவர் நோயாளிக்கு அறுவை சிகிச்சை மூலம் நுரையீரலில் இருந்த கட்டியை அகற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

உணவு, உடை, இருப்பிடம் இவற்றுடன் தொழில்நுட்பமும் தற்போது அனைவரின் அடிப்படை தேவையாகிவிட்டது. பிறப்பில் இருந்து இறப்பு வரை அறிவியலும், தொழில்நுட்பமும் நம் நிழல் போல கூடவே வருகிறது. தொழில்நுட்பம் பன்மடங்கு வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது. இது இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சி பல சாதகங்களையும், பாதகங்களையும் கொண்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பங்கள் பல ஆச்சரியமூட்டும் வேலைகளும் செய்து வருகிறது.

சீனாவின் மேற்கு பகுதியில் ஒரு நபர் நுரையீரல் சிகிச்சைக்காக சின்ஜியாங் பகுதியின் கஷ்கரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் லுவோ கிங்குவான், ஷாங்காயில் உள்ள மருத்துவமனையில் இருந்தார். அந்த நோயாளி இருக்குமிடத்திலிருந்து சுமார் 5,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனையில் இருந்தார். ஷாங்காயில் இருந்த அந்த மருத்துவர், 5G தொழில்நுட்பம் உள்ள அறுவை சிகிச்சை செய்யும் ரோபோ மூலம் அந்த நோயாளியின் நுரையீரல் கட்டியை அகற்றியுள்ளார்.

இந்த அறுவை சிகிச்சை செய்யும் ரோபோ இந்தியாவிலும் தயாரிக்கப்பட்டு, கடந்த மார்ச் மாதம் ஒரு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. ஆனால் இந்தியாவில் குர்கானில் இருந்த மருத்துவர், டெல்லியில் இருந்த நோயாளிக்கு, சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இந்தியாவில் அறுவை சிகிச்சை செய்த ரோபோ, சுமார் 5 கைகளை கொண்டிருக்கும். இந்த ரோபோ மூலம் இதய அறுவை சிகிச்சை கூட செய்யலாம் என கூறப்படுகிறது.

அந்த ரோபோ மூலம் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர் முன்னால் ஒரு 3D தொழில்நுட்பம் கொண்ட 32 இன்ச் ஸ்கீரின் இருக்கும். ஒரு கேமராவோடு இருக்கும் அந்த கருவி, மருத்துவர் வேறு எங்கும் பார்த்தால் நோயாளிக்கு சிகிச்சையளிப்பதை நிறுத்திவிடும். மறுபக்கம் நோயாளியுடன் இருக்கும் ரோபோ 5 கைகளுடன் 8 மில்லி மீட்டர் கருவியுடன் சிகிச்சை அளிக்கும் என கூறப்படுகிறது.