Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

முர்து பெர்னாண்டோ புதிய பிரதம நீதியரசராக சத்தியப்பிரமாணம்

.

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக முர்து நிரூபா பிந்துஷினி பெர்னாண்டோ ஜனாதிபதி செயலகத்தில் இன்று(02) முற்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

 

அதற்கமைய நாட்டின் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட இரண்டாவது பெண்ணாகவும் இலங்கையின் 48ஆவது பிரதம நீதியரசராகவும் முர்து பெர்னாண்டோ வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

பிரதம நீதியரசராக செயற்பட்ட ஜயந்த ஜயசூரிய ஓய்வு பெற்றதன் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு முர்து பெர்னாண்டோவின் பெயர் அரசியலமைப்பு பேரவையால் அண்மையில் அங்கீகரிக்கப்பட்டது.

 

1985ஆம் ஆண்டில் சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் இணைந்துகொண்ட அவர், 1997ஆம் ஆண்டில் பிரதி சொலிசிட்டர் ஜெனரலாகவும் 2014ஆம் ஆண்டில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகவும் பதவியுயர்வு பெற்றுக்கொண்டார்.

முர்து பெர்னாண்டோ அரச சட்டத்தரணியாக சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் இணைந்து 30 வருடங்களுக்கும் அதிக காலம் கடமையாற்றியுள்ளதுடன், 2018 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார்.

அவர் சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக கடமையாற்றியதுடன், உயர் நீதிமன்றத்தில் தற்போது பணியாற்றும் சிரேஷ்ட நீதியரசருமாவார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.