யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் ஹெரோயினை எடுத்துச் சென்றவருக்கு விளக்கமறியல்.
,
யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் ஹெரோயினை எடுத்துச் சென்றவருக்கு விளக்கமறியல்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மறியல் கைதி ஒருவரை பார்வையிட வந்த நபரின் உணவு பார்சலினை சோதனை இட்ட பொழுது அதிலிருந்து 2g 750mg ஹெரொயின் போதை பொருளை எடுத்துச் சென்ற நபர் சிறைச்சாலை அதிகாரிகளின் சோதனை இடும் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் (30) காலை இடம் பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் விணோஐன் வயது 26 என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நண்பன் ஒருவரை பார்வையிடுவதற்கு வந்த பொழுது உணவு fried rice பார்சல் ஒன்றுக்குள் மிகவும் சூட்சமமான முறையில் ஒளித்து வைத்து கொண்டுவரப்பட்ட நிலையில் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டது.
சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நபரை மேலதிக நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
குறித்த சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய பொழுது அவரை 14 திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


