Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

“பொருளாதார ஸ்திரத்தன்மையே எனது முதன்மையான முன்னுரிமை”

.

பொருளாதார ஸ்திரத்தன்மையை தனது முதன்மையான முன்னுரிமையாகக் கொண்டு வருவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் இலங்கையின் புதிய ஜனாதிபதியுமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனது வெற்றி மக்களின் வெற்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“மக்கள் நீண்டகாலமாக மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்ததாகவும், தனது வெற்றியின் மூலம் அது சாத்தியமாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

புதிய ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டவுடன், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும், அதற்காக வர்த்தக சமூகத்தினரின் உதவியை நாடியதாகவும் ஜனாதிபதி தெரிவத்துள்ளார்.

இந்த முயற்சியில் வெளிநாடுகள் எமக்கு உதவுமென நாங்கள் நம்புகிறோம் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதனிடையே, பிரதமர் தினேஷ் குணவர்தன பதவி விலகினால் அமைச்சரவை தானாகவே கலைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு நடந்தால் ஜனாதிபதி அநுரகுமார் திசாநாயக்க நான்கு புதிய அமைச்சர்களை நியமிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பொது தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரை 15 இலாகாக்கள் சமமாகப் பிரித்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தேர்தல்கள் ஆணைக்குழுவைச் சந்தித்து நாடாளுமன்ற தேர்தலை விரைவில் நடத்துவது குறித்து ஜனாதிபதி அநுரகுமார கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.