Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தை முட்டாள்த்தனமாக அணுகுமுறை என இந்திய பாதுகாப்பு ஆலோசகர் வர்ணித்துள்ளார்.

.

தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தை முட்டாள்த்தனமாக அணுகுமுறை என இந்திய பாதுகாப்பு ஆலோசகர் வர்ணித்துள்ளார்.
ஈழத்தமிழர்கள் பொலிஸ் அதிகாரத்தை பெறுவதற்கு வாய்ப்பு இல்லை ; இந்திய பாதுகாப்பு ஆலோசகர் வழங்கிய ஆலோசனை
ஈழத்தமிழர்கள் 13வது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரத்தை பெறுவதற்கான வாய்ப்பு இல்லை. ஆகவே, தற்போதுள்ள பிரதான 3 தமிழ் வேட்பாளர்களுடன் பேச்சு நடத்தி, கிடைக்கக்கூடிய அதிகபட்ச நன்மைகளை பெறுவதே புத்திசாலித்தனம்.
தமிழ் பொதுவேட்பாளர் என்ற முட்டாள்த்தனமான நடவடிக்கையில் இறங்கி, வாய்ப்புக்களை வீணடிக்காதீர்கள் என இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் (29) கொழும்பிலுள்ள இந்திய ஹவுஸில் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்த போது இதனை குறிப்பிட்டுள்ளார்.
செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், செ.கஜேந்திரன் ஆகியோருக்கு இந்த ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த சந்திப்புக்கு அழைக்கப்பட்ட த.சித்தார்த்தன், கவி.விக்னேஸ்வரன், மாவை சேனாதிராசா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
சி.சிறிதரன் சந்திப்பில் சிறிதுநேரம் கலந்து கொண்டு விட்டு, தனது வெளிநாட்டு சுற்றுலாவுக்கான விமானம் புறப்படும் நேரம் நெருங்குவதாக தெரிவித்து விட்டு சந்திப்பில் ஆரம்ப கட்டத்திலேயே வெளியேறி விட்டார்.