Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

எம்.ஜி.ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) அவர்களின் 109ஆவது பிறந்ததினம் யாழ்ப்பாணத்தில் நினைவேந்தல்!

,

தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய திரைப்பட உலகின் மூத்த நடிகருமான எம்.ஜி.ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) அவர்களின் 109ஆவது பிறந்ததினம் யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நினைவுகூரப்பட்டது.
யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் குடும்பத்தினரின் ஏற்பாட்டில், யாழ் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ராமச்சந்திரனின் சிலைக்கு முன்பாக இந்த நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வின் போது, கல்வியங்காடு வர்த்தக சங்க தலைவர் அ. கேதீஸ், எம்.ஜி.ராமச்சந்திரனின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். 
அதனைத் தொடர்ந்து, யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் குடும்பத்தினரால் எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் கோப்பாய் சுந்தரலிங்கம் ஆகியோரின் நினைவாக நெய் விளக்குகள் ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.

எம்.ஜி.ராமச்சந்திரனின் நெருங்கிய நண்பரும் தீவிர ரசிகனுமான யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம், கல்வியங்காடு பகுதியில் தனது சொந்த நிதியில் எம்.ஜி.ஆர் சிலையை அமைத்து, ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இயற்கை எய்தியதையடுத்து, அவரது குடும்பத்தினர் தொடர்ந்து இந்நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிகழ்வில் உள்ளூர் மக்கள், வர்த்தக சங்க உறுப்பினர்கள் மற்றும் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் பலரும் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.