Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இந்த தேர்தல் ஒட்டுமொத்த தமிழினத்தின் எதிர்காலத்துக்கான தேர்தலாக பார்க்கவேண்டும்! - இரா.சாணக்கியன்.

2024ஆம் ஆண்டு வரையில் இந்த மண்ணில் தேசிய மக்கள் சக்தி என்ற ஒன்று இருக்கவில்லை. இன்னும் ஒரு வருடத்துக்குள் இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கதை முடியும்.

இந்த தேர்தலை யாரும் ஒரு வட்டாரத்துக்கான தேர்தலாக பார்க்கக்கூடாது. இந்த தேர்தல் ஒட்டுமொத்த தமிழினத்தின் எதிர்காலத்துக்கான தேர்தலாக பார்க்கவேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் - தெரிவித்தார். 

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் மண்முனை தென் எருவில் பற்று சபைக்கு உட்பட்ட 10ஆம் வட்டார வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

மண்முனை தென் எருவில் பற்று சபைக்கு உட்பட்ட 10ஆம் வட்டாரமான பெரியகல்லாறு வட்டார வேட்பாளர் சி.பேரின்பராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்துகொண்டார்.

இந்த கூட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டதுடன் சிறப்புரைகளும் நடைபெற்றன.

இதன்போது உரையாற்றிய சாணக்கியன்,

2024ஆம் ஆண்டு வரையில் இந்த மண்ணில் தேசிய மக்கள் சக்தி என்ற ஒன்று இருக்கவில்லை. இன்னும் ஒரு வருடத்துக்குள் இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கதை முடியும். நாட்டின் பொருளாதார நிலைமை அவ்வளவு மோசமாக சென்றுகொண்டிருக்கிறது.

நாட்டில் உள்ள ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் இந்த நாட்டில் அவர்களுக்கு வேறு வேலை இல்லாதது போன்று வடக்கு கிழக்கிலேயே சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

நாங்கள் இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினை வழங்குவீர்களா என்று கேட்டால் அவர்களிடமிருந்து பதில் வராது. அந்த வேளையில் எங்களை வேறு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் போன்று பார்ப்பார்கள்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு தேசிய மக்கள் சக்தியில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த அரசாங்கம் சந்தர்ப்பம் வழங்குவதில்லை.

பிமல் ரத்நாயக்கவின் செல்லப்பிள்ளைகளுக்கு மட்டுமே நேரம் ஒதுக்கப்படும். தமிழர்களின் பிரச்சினையை தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் உள்ள ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினராலேயே பேசமுடியாது என்றால் எவ்வாறு ஒரு உள்ளூராட்சி மன்ற உறுப்பினரால் முடியும். தமிழ் அரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினரால் மட்டுமே அதற்கு முடியும் என தெரிவித்தார்.