Breaking News
மியான்மர் நிலநடுக்கத்தில் தொடரும் மீட்பு பணி, இறப்பு 2,000 ஐ நெருங்குகிறது
அமெரிக்கா 2 மில்லியன் டாலர் உதவியை உறுதியளித்தது.

மியான்மர் மற்றும் தாய்லாந்தில் இரு தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மீட்பு பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலநடுக்கத்தில் இதுவரை சுமார் 2,000 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
அதே நேரத்தில் மண்டலே நகரில் உள்ள கிரேட் வால் ஹோட்டலின் இடிபாடுகளில் இருந்து ஒரு பெண் உயிருடன் மீட்கப்பட்டதாக சீன அரசு பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மியான்மரில் பெரும் அழிவையும் அண்டை நாடான தாய்லாந்தில் சேதத்தையும் ஏற்படுத்திய 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில் மண்டலே உள்ளது.
தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில், இடிந்து விழுந்த கட்டுமான இடிபாடுகளுக்குள் புதைந்திருப்பதாக நம்பப்படும் 76 பேரைத் தேடும் பணியை அவசரக் குழுவினர் திங்கள்கிழமை மீண்டும் தொடங்கினர்.