Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

ட்ரம்ப் இன்று சீனா பயணம்!

,

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று (13) சீனாவிற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
சுமார் ஒரு தசாப்த காலத்திற்குப் பிறகு அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் சீனாவிற்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  

உலகின் மிகப்பெரிய இரண்டு பொருளாதார நாடுகளுக்கு இடையிலான உறவில் இது ஒரு தீர்மானமிக்க தருணம் என அந்த அறிக்கைகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.
2025 ஒக்டோபர் மாதம் தென்கொரியாவின் புசான் நகரில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஷி ஜின்பிங் சந்தித்த பிறகு, அவர்கள் நேருக்கு நேர் சந்திக்கும் முதல் விஜயம் இதுவாகும். 

மேலும், 2025 ஜனவரி 20 ஆம் திகதி தனது இரண்டாவது ஜனாதிபதி பதவிக்காலத்தைத் தொடங்கிய பின்னர் ட்ரம்ப் மேற்கொள்ளும் முதலாவது சீன விஜயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போர் மற்றும் உலகளாவிய எண்ணெய் சந்தை சிக்கல்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.