Breaking News
தமிழ்நாடு அரசு சார்பில் இசைஞானி இளையராஜாவிற்கு விழா: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.
35 நாட்களில் சிம்பொனியை எழுதிய இளையராஜா.

இசையமைப்பாளர் இளையராஜாவின் அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் 'இசைஞானி' இளையராஜா, லண்டனில்உள்ள ஈவன்டின் அப்போலோ அரங்கத்தில் கடந்த மார்ச் 8 ஆம் தேதி சிம்பொனி இசையை அரங்கேற்றினார்.
இதற்கு பல தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள், அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முதல்வர் ஸ்டாலினை, இளையராஜா சந்தித்து பேசினார்.
அதனை குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் முதல்வர் இட்ட பதிவில் இந்த விழா நடத்துவது பற்றி கூறியுள்ளார்.
"ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும்!" என முதல்வர் கூறியுள்ளார்.