இந்திய வலைதளங்களை குறிவைத்து பாகிஸ்தான் சைபர் தாக்குதல்கள்; அனைத்தையும் முறியடித்த இந்திய சைபர் பாதுகாப்பு நிறுவனங்கள்.
இந்தத் தாக்குதல்கள் வெளிப்புற ஆதரவுடன் செயல்படுவதாக சந்தேகிக்கப்படும் "சைபர் குரூப் HOAX1337" மற்றும் "நேஷனல் சைபர் க்ரூ" ஆகிய ஹேக்கர் குழுக்களுடன் தொடர்புடையவையாகும்.

சமீபத்திய தொடர்ச்சியான சைபர் ஊடுருவல்களில், பாகிஸ்தான்ஹேக்கர் குழுக்கள் குழந்தைகள் கல்வி, முன்னாள் ராணுவ வீரர்களின் நலன் மற்றும் பொது சேவைகள் தொடர்பான இந்திய வலைதளங்களை ஊடுருவ பல முயற்சிகளை மேற்கொண்டனர்.
எனினும், இவை அனைத்தையும் இந்திய சைபர் பாதுகாப்புநிறுவனங்கள் விரைவாகக் கண்டறிந்து தடுத்துள்ளன.
குறிப்பிடத்தக்க இடையூறுகள் அல்லது தரவு கசிவுகள் எதுவும் ஏற்படவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான எரிச்சலூட்டும் உள்ளடக்கத்தைப் பரப்புவதற்காக நக்ரோட்டா மற்றும் சுஞ்சுவானில் உள்ள ராணுவ பொதுப் பள்ளிகளின் வலைதளங்கள் இவர்களுக்கு முக்கிய இலக்குகளாக இருந்துள்ளன.
இந்தத் தாக்குதல்கள் வெளிப்புற ஆதரவுடன் செயல்படுவதாக சந்தேகிக்கப்படும் "சைபர் குரூப் HOAX1337" மற்றும் "நேஷனல் சைபர் க்ரூ" ஆகிய ஹேக்கர் குழுக்களுடன் தொடர்புடையவையாகும்.