Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதத்தை நடத்த சந்தர்ப்பம் தாருங்கள்!

,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதத்தை நடத்த சந்தர்ப்பம் தாருங்கள் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று (11) கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

சபாநாயகர் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக முன்வைத்த விடயங்கள் குறித்து சில கருத்துக்களை முன்வைக்க வேண்டி காணப்படுகின்றன. அரசியலமைப்பின் 46 (1), ஆம் பிரிவின் பிரகாரம், தெளிவாக அமைச்சர்களை நியமிக்கும் செயல்முறையின் போது பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர். 

சம்பந்தப்பட்ட பிரதி அமைச்சர் நிறைவேற்று அதிகாரத்தை செயல்படுத்தும் நபராக இருந்து வருகிறார். 

பாராளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பும் போது அமைச்சரவை அமைச்சரின் சார்பாக பிரதி அமைச்சர் பதிலளிக்கிறார். அரசியலமைப்பின் பிரிவுகள் 46 (1) மற்றும் 46 (3) இல் நியமனம் மற்றும் நீக்கம் செய்யும் அதிகாரம் காணப்படுகின்றன என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான உண்மை யதார்த்தங்களை இந்நாட்டில் இலட்சக்கணக்கான மக்களும், கத்தோலிக்க சமூகமும், பாதிக்கப்பட்டவர்களும் என சகலரும் எதிர்பார்ததுக் கொண்டிருக்கின்றனர். சரியான தகவல், பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டவர் யார் என்பதைக் கண்டறிய வழிவகுக்கும் விவாதம் குறித்து பேசுகிறோம். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பாகவேனும் இதுபோன்ற விவாதத்தை நடத்த சந்தர்ப்பத்தைப் பெற்றுத் தருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (11) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.