காட்டு யானை தாக்கி ஹங்கேரி நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்!
காட்டு யானையுடன் மோதிய தபால் ரயிலொன்று தடம் புரண்டுள்ளது!
சீகிரியா - பிதுரங்கல வீதியில் காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டை சேர்ந்த 68 மதிக்கத்தக்க சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த வெளிநாட்டுப் பயணி தனது மனைவியுடன் சீகிரியா, பிதுரங்கல வீதியில் பாதசாரியாகச் சென்று கொண்டிருந்த போதே, திடீரென அங்கு வந்த காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து சீகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
காட்டு யானையுடன் மோதிய தபால் ரயிலொன்று தடம் புரண்டுள்ளது!
கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த தபால் ரயிலொன்று இன்று (17) தண்டவாளத்தைக் கடக்க முயன்ற காட்டு யானையுடன் மோதியதில் தடம் புரண்டுள்ளது. இவ் விபத்தில் சம்பவ இடத்திலேயே காட்டு யானை உயிரிழந்துள்ளது.
காட்டு யானையின் காலின் ஒரு பகுதி ரயிலின் இயந்திரத்தில் சிக்கியதனாலேயே ரயில் தடம் புரண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவுடுல்ல வனப் பகுதியிலிருந்து சோமாவதி வனப்பகுதிக்கு தண்டவாளத்தைக் கடந்து செல்ல முயன்றபோதே இவ் விபத்து நேர்ந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


