Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

ஐக்கிய நாடுகள் குழு கடும் விசனம் ; முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட உள்ளடக்கம்,

,

சிறுவர் திருமணம், வீட்டு வன்முறைக்கு இடமளிக்க கூடிய முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் தொடர்பில் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஐக்கிய நாடுகள் குழு தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.

நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் பெண்களின் தேவைகளை பூர்த்தி செய்வதை இலக்காகக் கொண்ட நேர்மறை நகர்வாக பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசிய நிகழ்ச்சித் திட்டம் அமைந்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அக்குழு,

இந்நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் நடுத்தரகால மீளாய்வு மேற்கொள்ளப்பட்டதா? என கேள்வியெழுப்பியுள்ளது.

அதேவேளை கடந்த 2022 ஆம் ஆண்டு முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பினும், 

அச்சட்டம் இன்னமும் கரிசனைக்குரிய பல கூறுகளை உள்ளடக்கியிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அக்குழு, சிறுவர் திருமணத்தை நீக்குதல் உள்ளடங்களாக இச்சட்டத்தை மேலும் திருத்துவதற்கான திட்டங்கள் உள்ளனவா என வினவியுள்ளது.

அதேபோன்று 'இலங்கையில் ஐவரில்  ஒருவர் என்ற விகிதாசாரத்தில் பெண்கள் தமது மிக நெருங்கிய துணைவரின் வன்முறைத் தாக்குதலுக்கு இலக்காகுகின்றனர். இருப்பினும் அவற்றில் பெரும்பாலான சம்பவங்கள் குறித்து முறைப்பாடளிக்கப்படுவதில்லை. 

இந்நிலையில் வீட்டு வன்முறையை தடுப்பதற்கான சட்டத்தில் உத்தேச திருத்தங்களை மேற்கொள்வதற்கான காலப்பகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதா? 

அத்தகைய வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எவ்வாறான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது?' எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்படி குழு கேள்வியெழுப்பியுள்ளது.