Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இலங்கையில் சட்டம் இந்துக் கோவில்களுக்கு ஒரு நியாயமாகவும் புத்த விகாரைகளுக்கு இன்னொரு நியாயமாகவும் இருக்கிறது.

,

தையிட்டியில் கட்டிய புத்த விகாரையை இடிக்க முடியாது என சிங்கள அரசு கூறுகின்றது.
ஆனால் இதே சிங்கள அரசு தம்புள்ளையில் சட்டவிரோதமாக கட்டப்பட்டது என்று இந்து கோவிலை இடித்துள்ளது.
ஆக இலங்கையில் சட்டம் என்பது இந்துக் கோவில்களுக்கு ஒரு நியாயமாகவும் புத்த விகாரைகளுக்கு இன்னொரு நியாயமாகவும் இருக்கிறது.
இங்கு அச்சம் தரும் விடயம் என்னவெனில் தையிட்டியுடன் புத்த விகாரைகள் நின்றுவிடப்போவதில்லை.
அது வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் இன்னும் பல இடங்களில் முளைக்கப் போகின்றது.
தமிழர் பகுதிகளில் 2000 விகாரைகள் அமைக்கும் திட்டத்தை ஆரம்பித்து நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
அதேவேளை இந்திய அரசு யாழ் மருத்துவமனையில் புகுந்து கொன்றுவிட்டு அதே மருத்துவமனை வாசலில் காந்தி சிலை நிறுவி  வருடந்தோறும் காந்தி ஜெயந்தி கொண்டாடுகின்றது.
இன்னொருபுறம் யாழ் நகரில் உயரமான பெரியார் சிலை நிறுவப்படும் என திராவிடம் அறிவிக்கின்றது.
இங்கு வேதனை என்னவென்றால் இந்த காந்தி மற்றும் பெரியார் சிலைகளாலும் சட்டவிரோத புத்த விகாரைகளை தடுத்த நிறுத்த முடியவில்லை.
மாறாக ஆரியமும் திராவிடமும் சிங்கள அரசுக்கே துணை புரிகின்றன.
இந்த ஆபத்துகளை தமிழ் இனம் எப்படி எதிர் கொள்ளப் போகின்றது?