Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மக்களுக்கு ஆரோக்கியமிகுந்த சுகாதாரமான வாழ்க்கையை வழங்குவதே சுகாதார அமைச்சின் பணியாகும் - நலிந்த ஜயதிஸ்ஸ

.

பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் மக்களுக்கு ஆரோக்கியமிகுந்த சுகாதாரமான வாழ்க்கையை வழங்குவதே சுகாதார அமைச்சின் பணியாகும் - சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ

பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் மக்களுக்கு ஆரோக்கியமிகுந்த சுகாதாரமான வாழ்க்கையை வழங்குவதே சுகாதார அமைச்சின் பணியாகும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

ஜனவரி முதலாம் திகதி, சுகாதார அமைச்சின் ஊழியர்கள் புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையும் எதிர்காலத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் வர்த்தமானியாக வெளியிடப்படும் எனவும், புதிய யுகத்திற்கு பிரவேசிக்கும் நம்பிக்கையுடன் இந்நாட்டு மக்கள் புதிய அரசாங்கத்திற்கு பாரிய ஆணையை வழங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், அனைத்து அதிகாரிகள் மற்றும் பிரஜைகளின் பங்களிப்புடன் எதிர்வரும் ஐந்து வருடங்களில் இலங்கை பிரஜைகளின் நம்பிக்கையை நிறைவேற்றி நாட்டை மேம்படுத்தும் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், சுகாதார சேவையை இலாபம் ஈட்டும் சேவையாக அரசாங்கம் கருதுவதில்லை, சுகாதாரம் என்பது பொது சேவையாகும். எனவே, இந்த சேவையை நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் மக்களுக்கு இயன்றனவு வழங்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.