Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

சர்வதேச கிரிக்கட்டிலிருந்து அஸ்வின் ஓய்வு!

.

இந்திய கிரிக்கெட் அணிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் நடைபெற்றது.

டிசம்பர் 18ஆம் தேதியன்று டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது.

இதை அடுத்து, ஆட்டம் சமநிலையில் முடிந்தது.

இந்த போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேலும் சக வீரர்களுக்கும் பிசிசிஐ-க்கு நன்றி தெரிவித்தார்.

38 வயது அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

106 டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்டுகளை அவர் சாய்த்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் ஆக அதிக விக்கெட்டுகளைச் சாய்த்த இந்திய வீரர்கள் பட்டியலில் அஸ்வின் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

முதல் இடத்தில் அனில் கும்ப்ளே உள்ளார்.

அவர் 619 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

2010ஆம் ஆண்டில்  இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணிக்காக அஸ்வின் முதன்முறையாகக் களமிறங்கினார்.