Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ரணிலின் பதவிக்காலம் நீடிக்கப்படுமா?; ஆராயும் அரசியல் ஆய்வாளர்கள்.

சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக் காலத்தை மேலும் ஐந்து வருடங்களால் நீட்டிக்க ஐக்கிய தேசியக் கட்சி!

ரணிலின் பதவிக்காலம் நீடிக்கப்படுமா?; ஆராயும் அரசியல் ஆய்வாளர்கள்.

இலங்கை அரசியலமைப்புக்கு அமைவாக ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டியிருந்தாலும் அதனை தவிர்த்து சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக் காலத்தை மேலும் ஐந்து வருடங்களால் நீட்டிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் எழுத்தாளர் குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

விசேடமாக ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் யார் என்பதை ஐக்கிய தேசியக் கட்சி மூலம் முன்னிலைப்படுத்த வேண்டிய நிலையில் இதுவரையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை தேர்வு செய்து கொள்ள முடியாத ஒரு சூழல் உருவாகியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச இருவருக்கும் மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் தோன்றியுள்ள நெருக்கடியான கேள்விக்கு ரணில் விக்கிரமசிங்கவை தொடர்ந்தும் ஜனாதிபதியாக தக்க வைத்துக்கொள்வது அவர்களுக்கு எல்லா விதத்திலும் அனுகூலமாக அமையும் என்பது அரசியல் வட்டாரங்களின் நிலைப்பாடாக காணப்பட்டு வருகிறது.

1977ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 5/6 அதிகாரத்தை பெற்ற ஜே.ஆர். ஜயவர்தன 1982ஆம் ஆண்டில் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நாடாளுமன்ற பதவிக் காலத்தை மேலும் ஐந்து வருடங்களால் நீடித்ததுடன் மொத்தமாக அவருடைய பதவிக்காலம் பத்து வருடங்களால் நீட்டிக்கப்பட்டது.

விசேடமாக ஜனாதிபதியுடைய பதவிக் காலத்தை நீட்டிக்க சர்வஜன வாக்கெடுப்பை மேற்கொள்ள நாடாளுமன்றத்தில் 2/3 அதிகாரம் அவசியம்.

தற்போது ரணில் விக்கிரமசிங்கவிற்கு கீழ் நாடாளுமன்றத்தில் அதிகளவான விசேட சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள காரணத்தினால் சர்வஜன வாக்கெடுப்பினால் ரணிலுக்கு அதிக அரசியல் இலாபங்கள் காணப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

யாப்பின் பிரகாரம், எதிர்வரும் நவம்பர் மாதம் 17ஆம் திகதி தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையில் நிச்சயமாக புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய வேண்டும்.

இவ்வாறான ஒரு சூழலில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவது குறித்து காணப்படும் சாத்தியக்கூறுகள் தொடர்பில் நீதித் துறையினர் மத்தியிலும் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.