Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பசிலுடன் இணைகிறாரா பாட்டலி சம்பிக்க ரணவக்க?

.

பசிலுடன் இணைகிறாரா பாட்டலி சம்பிக்க ரணவக்க?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பசில் ராஜபக்சவுடன் இணைந்து புதிய கூட்டணி அமைக்கப்போவதாக எழுந்துள்ள வதந்திகளுக்கு ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பதிலளித்துள்ளார்.

நாட்டிற்கு தேவையான கூட்டணியை உருவாக்குவதற்கு ராஜபக்சர்கள் மட்டுமன்றி நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ள ஆதரவு வழங்கியவர்களுடனும் கலந்துரையாட மாட்டேன் எனவும் அவர் தெரழவழத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இந்த நாட்டை வங்குரோத்தாக்க நினைக்கும் எவருடனும் நாங்கள் கூட்டணி அமைக்க மாட்டோம்.

ஐக்கிய குடியரசு முன்னணியில் இருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்தை பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி முன்வைத்தோம்.

எங்கள் நிகழ்ச்சி நிரல் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்தோம். ஆனால் நாங்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச , கோட்டாபய ராஜபக்ச ஆகியோரை நிகழ்ச்சி நிரலுக்கு அழைக்கவில்லை.

மக்கள் விடுதலை முன்னணிக்கும் எங்கள் நிகழ்ச்சி நிரலுக்கு அழைப்பு விடுத்தோம். ஆனால் அவர்கள் எங்களுடன் கலந்துரையாட மறுத்துவிட்டனர்.

இந்த நாட்டுக்குத் தேவையான கூட்டணியை உருவாக்க ராஜபக்சக்களுடன் மற்றும் நாட்டை வங்குரோத்து நிலைக்குக் காரணமானவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்.

எதிர்காலத்தில் உருவாக்கப்படும் அரசியல் கூட்டமைப்பானது தலைமைத்துவ சபையினால் ஆளப்படும் எனவும் அதற்கமைவாக பெரும்பான்மையினரால் தீர்மானிக்கப்படும் வேட்பாளர் ஜனாதிபதி வேட்பாளராக முன்வைக்கப்படுவார்‘ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘அந்த வேட்பாளர் பதவிக்கு நான் முன்மொழியப்பட்டால், நான் போட்டியிடுவேன்.‘ என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.