Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சஜித்தின் அரசாங்கத்தில் பிரதமர் யார்?: இரண்டு பேர் கடும் போட்டி

.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றால் அவர் ஜனாதிபதியாக பதவியேற்று அமைக்கும் அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு போட்டி ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினராக உள்ள லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவுக்கு இடையில் இந்த போட்டி ஏற்பட்டுள்ளது.

ரஞ்சித் மத்துமபண்டார இந்தப் போட்டியில் முன்னணியில் இருப்பதாக தெரியவருவதுடன், பிரதமராக ரஞ்சித் மத்துமபண்டாரவை நியமிக்க வேண்டுமென மொனராகலை மாவட்டத்தில் உள்ள அவரது ஆதரவாளர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்த நிலையில் நாளை வியாழக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சிகள் இணைந்து அமைத்துள்ள கூட்டணிக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிர ஏனைய அனைத்துக் கட்சிகளும் சஜித் பிரேமதாசவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இறுதி முடிவை எடுக்காததால் நாளைய தினம் கூட்டணி ஒப்பந்தத்தில் அக்கட்சி கைச்சாத்திடாதென தெரியவருகிறது.