ஆபரேஷன் சிந்தோர் என்ற பெயரில் பாஹல்காம் தாக்குதல் - இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
இது கோழைத்தனமான தாக்குதல் பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும்,

ஆபரேஷன் சிந்தோர் என்ற பெயரில் பாஹல்காம் தாக்குதல் - இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதலை இன்று நள்ளிரவு 1.44 மணியளவில் தொடுத்தது. ஏவப்பட்ட ஏவுகணைகள் பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது தாக்கின. இதில் 3 பேர் உயிரிழப்பு, 12 பேர் படுகாயம். எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் உள்ளதாக இந்திய ராணுவம் அறிவிப்பு.
பாகிஸ்தானில் 5 இடங்களில் கோழைத்தனமான தாக்குதல்களை எதிரிகள் நடத்தி உள்ளனர். போர் நடவடிக்கைக்கு பதிலளிக்க பாகிஸ்தானுக்கு முழு உரிமையும் உள்ளது. பலமான பதிலடி கொடுக்கப்படும். முழு தேசமும் பாகிஸ்தான் ஆயுதப் படைகளுடன் நிற்கிறது.
பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியதாக இந்தியா தெரிவித்துள்ளது. கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவ தளங்கள் மீது நடத்தப்படவில்லை என இந்திய இராணுவம் உறுதிப்படுத்தியது. இன்று (07) காலை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து செய்தியாளர் சந்திப்பை நடத்தி விளக்கம் அளிக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்தியா தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக 5 இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று ரஃபேல் ஜெட் விமானங்கள், ஒரு மிக் -29 மற்றும் ஒரு எஸ்யூ -30 போர் விமானம் உட்பட ஐந்து இந்திய விமானப்படை ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
யெய்ஷ் இ முகமது தலைமையகம் தரைமட்டமானது.
இந்திய ராணுவம், ஆயுதப்படைகள் இன்று அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) முழுவதும் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தின. மிக முக்கியமான இலக்குகளில் ஒன்று பஹாவல்பூரில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தலைமையகம் தரைமட்டமானது. மற்றொரு பெரிய தாக்குதல் சம்பாவுக்கு எதிரே உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள முரிட்கேவைத் தாக்கியது.