Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

அரச வங்கிகளில் 65 ஆயிரம் கோடி கடன் பெற்ற அமைச்சர்கள்!: மீளச் செலுத்தப்படவில்லை என்கிறது மத்திய வங்கி ஊழியர் சங்கம்

.

 

தற்போது அமைச்சர்களாகப் பதவி வகிப்போர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கு நெருக்கமான வர்த்தகர்கள் 10 பேர் இரு அரச வங்கிகளுக்கு 65,000 கோடி ரூபாயை மோசடி செய்து கடன் செலுத்துவதை தவிர்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாடலி சம்பிக்க ரணவக்க வெளிப்படுத்தியுள்ளார்.

இதன் காரணமாக சாதாரண பிரஜை ஒருவருக்கு வங்கி ஒன்றின் மூலம் கடன் பெற்றுக் கொள்ள முடியாத நிலைக்கு வங்கிகள் தள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது வரிக்கு மேல் வரி செலுத்தி பொது மக்களை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ள நிலையில் புதிய வரி வகைகள் இரண்டின் மூலம் அரச வருவாயை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பாடலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

சம்பவம் உண்மை என உறுதி

பிரபல அமைச்சர்கள் உள்ளிட்ட பிரபல வர்த்தகர்கள் 10 பேர் 65,000 கோடி ரூபாயை இரு வங்கிகளுக்கு மோசடி செய்ததாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கை வங்கியின் ஊழியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்கவிடம் ‘ஒருவன்‘ செய்திப்பிரிவு கேட்டது.

அதன்போது அவர் சம்பவத்தை உண்மை என உறுதிப்படுத்தியுள்ளார்.

இரு அரச வங்கிகளிடம் 65,000 கோடி ரூபாய் கடன் பெற்று அதனை மீள செலுத்தாது செயற்படும் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கு நெருக்கமான வர்த்தகர்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அநேக தடவைகள் கேள்வியெழுப்பியிருந்தாலும் அதற்கு சரியான பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் செயலாளர் தெரிவித்தார்.

20 வருட கடன்

அவர்கள் சுமார் 20 வருடங்களாக இவ்வாறு வங்கிகளில் கடன் பெற்று அவற்றை மீள செலுத்தாது வெவ்வேறு வழிமுறைகளில் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர்களுக்கு சட்டரீதியாக நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இரு அரச வங்கிகளிலும் காணப்படுவது நாட்டின் சாதாரண மக்கள் வைப்பிலிட்ட பணம் என்பதால், அவற்றை இவ்வாறு அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமான வர்த்தகர்களால் கடனாக பெற்றுக்கொண்டு மாசடிகளில் ஈடுபடுவது வங்கிகளால் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு நிலை என இலங்கை வங்கியின் ஊழியர் சங்கத்தின் பிரதான செயலாளர் தெரிவித்தார்.

இன்று வரையில் இந்தக் கடன் தொகை மீள செலுத்தப்படவில்லை என அவர் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.