பில்லியன் டாலர் கடன்; இந்தியா, சீனாவின் செல்வாக்கு - புதிய ஆண்டில் ஜனாதிபதிக்கு காத்திருக்கும் சவால்கள்
.

இலங்கையின் புதிய இடதுசாரி அதிபரும் அவரது கட்சியும் பெற்ற பிரமிக்க வைக்கும் தேர்தல் வெற்றி அந்நாட்டு அரசியல் சூழலை மாற்றியுள்ளன.
ஆனால், இலங்கையில் நிதி நெருக்கடி நிலவும் நிலையில் அந்நாட்டின் புதிய தலைவர்கள், தங்கள் பிரசார வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குக் கடினமான சூழல் நிலவுகிறது.
செப்டம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்கவின் குறிப்பிடத்தக்க வெற்றியைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலில் அவரது தேசிய மக்கள் சக்தி (NPP) கூட்டணிக்கு மகத்தான வெற்றி கிடைத்தது.
ஒரு புதிய ஆண்டு தொடங்கும் வேளையில், மோசமான பொருளாதார நெருக்கடி மற்றும் பல ஆண்டுகளாக தவறான ஆட்சியில் இருந்து மீள முயற்சிக்கும் நாட்டுக்கு இது ஒரு திருப்புமுனையாக இருக்க வேண்டும் என்று அவரும் அவரது ஆதரவாளர்களும் விரும்புகிறார்கள்.
எவ்வாறாயினும், புதிய அரசாங்கத்திடம் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்ட வாக்காளர்களுக்கு, தாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான சூழல், சற்று கடினமாகவே உள்ளது.
கடந்த 2022இல் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்கு பின்னர், இலங்கையின் பொருளாதார எழுச்சி பலவீனமாகவும் முழுமையற்றதாகவும் உள்ளது.நவம்பரில், தேசிய மக்கள் சக்தி கூட்டணி (NPP) 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில்159 இடங்களை வென்றது. மேலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை அடைந்தது.
இந்த வெற்றி திஸாநாயக்கவுக்கு குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வலுவான அதிகாரத்தை வழங்குகிறது.