நாளை முதல் தமிழகம் – யாழ்., பயணிகள் படகு சேவை மீண்டும் ஆரம்பம்.
யாழ்ப்பாணம் மற்றும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் வரையிலான பயணிகள் படகு சேவை

நாளை முதல் தமிழகம் – யாழ்., பயணிகள் படகு சேவை மீண்டும் ஆரம்பம்.
நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையிலான 60 கடல் மைல்கள் (110 கிமீ) வரை பயணிக்கும் படகுச் சேவைக்கான வரிகளை உள்ளடக்கிய ஒரு வழி கட்டணமாக 17,641 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் இந்தியாவின் 18 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும், இலங்கையில் இருந்து பயணிக்கும் பயணிகளுக்கு 16,445 கட்டணமான நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பொருந்தக்கூடிய வரிகள் மற்றும் பிற கட்டணங்களுக்கான செலவுகளை ஒரு வருட காலத்திற்கு மாதாந்தம் 25 மில்லியனுக்கும் அதிகமான தொகையை ஏற்க இந்தியா முடிவு செய்துள்ளது.
மேலும் பயணி ஒருவர் 60 கிலோ கிராம் நிறையுடைய பொருட்களை எடுத்துச் செல்ல முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவையில் ஈடுபடுத்த அந்தமானில் தயாரிக்கப்பட்ட பெர்ரி படகு கடந்த 10 ஆம் திகதி நாகை துறைமுகத்தை சென்றடைந்துள்ளது. அதில் ஒரே நேரத்தில்160 பேர் வரை பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, காங்கேசன்துறை துறைமுகத்தை புதுப்பிக்க இந்திய அரசாங்கம் 63.65 மில்லியன் அமெரிக்க டொலர்களை மானிய உதவியாக வழங்கியிருந்தது.
சுமார் நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு, கடந்த ஆண்டு ஒக்டோபரில் இந்திய-இலங்கை படகுச் சேவை தொடங்கப்பட்டது, எனினும், மோசமான வானிலை காரணமாக அந்தச் சேவை நிறுத்தப்பட்டனது.
கடந்த 1983 ஆம் ஆண்டு வரை மன்னார் மற்றும் தூத்துக்குடி இடையே படகு சேவை இயக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.