Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம்: ஆக்ரோஷத்தில் பொதுமக்கள்

.

அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான பல வாகனங்கள் காலி முகத்திடலுக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளதை காணமுடிந்தது.

இது தொடர்பான விசாரணையின் போது, ​​ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக பல்வேறு பணிகளுக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட 97 அரச வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்த அலுவலகத்தை அடுத்துள்ள காலி முகத்திடலுக்கு அருகில் நேற்று (24) முதல் அந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

புதிய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்ததன் பின்னர், வாகனங்களை பயன்படுத்தியவர்கள் வாகனங்களை நிறுத்தியுள்ளதாக நேற்று அந்த இடத்திற்கு விஜயம் செய்த தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

இவ்வாறு கொண்டு வந்து போடப்பட்ட வாகனங்களை பார்க்க பொதுமக்களும் வருகைத்தந்திருந்தனர்.

இதேவேளை, “DP” என்ற எழுத்துகளுடன் இலக்கத் தகடுகளுடன் கூடிய வாகனங்களும் அங்கு காணப்பட்டமை காணொளியாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

இராஜதந்திர சேவையில் உள்ளவர்களின் வாகனங்களுக்கு மாத்திரமே “DP” என்ற இலக்கத் தகடுகள் உள்ள வாகனங்கள் வழங்கப்படுவது வழமை.

ஆனால் இந்த வாகனங்கள் உண்மையில் இராஜதந்திர சேவையில் இருந்தவர்களுக்கு வழங்கப்பட்டதா அல்லது இராஜதந்திர சேவை என்ற பெயரில் வேறு சாதாரண நபர்களுக்கு இந்த வாகனங்கள் வழங்கப்பட்டிருந்தா என்ற சந்தேகங்களும் எழுகின்றன.

அரச சொத்துக்கள் எவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளன என்பதை காலிமுகத் திடலில் கண்கூடாக பொதுமக்களால் காணக்கூடியதாக இருந்தது.