Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

35 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை; பத்திரமாக மீட்ட பேரிடர் மீட்புக் குழுவினர்

.

இந்தியா, ராஜஸ்தான் மாநிலம், தவுசா மாவட்டம், பாண்டூகி எனும் இடத்தில் நேற்று புதன்கிழமை மாலை 6 மணியளவில் 2 வயது பெண் குழந்தையொன்று விளையாடிக் கொண்டிருந்தது.

வெகுநேரமாகியும் குழந்தையைக் காணவில்லையென பெற்றோர் தேடியுள்ளனர்.

தொடர்ந்து குழந்தை விளையாடிக் கொண்டிருந்த இடத்துக்கருகிலுள்ள 35 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

சிறிது நேர போராட்டத்தின் பின்னர் குழந்தையை மீட்க முடியாமல் போன நிலையில், தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.

படைவீரர்கள் நவீன கருவிகளின் உதவியுடன் ஆழ்துளை கிணற்றின் அருகில் குழி தோண்ட முயற்சித்தனர்.

தொடர்ந்து 18 மணித்தியால போராட்டத்தின் பின்னர் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

உடனடியாக குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

இதுபோன்ற பல குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் விழுந்து அநியாயமாக பலியான பல சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விவசாய நடவடிக்கைகளுக்காக இதுபோன்ற ஆழ்துளை கிணறுகள்ள தோண்டப்படும் பொழுது அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.