Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சஜித் பிரமேதாச முறையாக நிர்வகிக்காததன் காரணமாகவே இன்று அந்த கட்சிக்கு இந்த நிலைமை

.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்தை சஜித் பிரமேதாச முறையாக நிர்வகிக்காததன் காரணமாகவே இன்று அந்த கட்சிக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக மாத்திரமின்றி எதிர்க்கட்சி தலைவராகவும் சஜித் பிரேமதாச உரிய முறையில் செயற்படவில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்தில் காணப்பட்ட பலவீனத்தின் காரணமாகவே நான் அக்கட்சியிலிருந்து விலகினேன். அதே போன்று மேலும் பல சிரேஷ்ட உறுப்பினர்களும் கட்சியை விட்டுச் சென்றனர். அவர் வகித்த இரு பதவிகளிலும் முறையான நிர்வாகத்தில் ஈடுபடவில்லை.

எனவே அந்த கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் விரும்பினால் ஹர்ஷ டி சில்வாவை தலைவராக தெரிவு செய்வதிலும் தவறில்லை. சஜித் பிரேமதாசவின் தலைமையில் இவர்களால் பலமானதொரு எதிர்க்கட்சியாக செயற்பட முடியாது.

மாற்று வழியொன்று இல்லாததன் காரணமாகவே மக்கள் தேசிய மக்கள் சக்தியை தெரிவு செய்துள்ளனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிலிண்டருக்கு வாக்களித்தவர்கள் கூட இம்முறை தேசிய மக்கள் சக்தியை தெரிவு செய்துள்ளனர். இனியாவது ஐக்கிய மக்கள் சக்தி பிரதான எதிர்க்கட்சியான அதன் பொறுப்பை முறையாக நிறைவேற்ற வேண்டும் என்றார்.