Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

“ரணில் – ராஜபக்ச அல்ல சஜித் – ராஜபக்ச“

.

ரணில் விக்ரமசிங்கவிடம் எந்தவொரு டீல் அரசியல் இல்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.

பதுளையில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற ‘ரணிலால் இயலும்’ பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த தலதா,

“பணம் செலுத்த முடியாமல் கடலில் நங்கூரமிட்டிருந்த கப்பல்களில் இருந்த கேஸை கரைக்குக் கொண்டு வர ஜனாதிபதி தான் பங்களித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காது என்றும் கடன் கிடைக்காது என்றும் எதிரணியில் இருந்த பொருளாதார நிபுணர்கள் கூறிவந்தனர். ரணில் ராஜபக்ஷ என்றனர். அவர்களின் குற்றச்சாட்டுகள் பொய்யாகியுள்ளன.

ரணில் – ராஜபக்ஷ அல்ல சஜித் – ராஜபக்‌ஷ என்று தான் கூற வேண்டும். அவரைப் பிரதித் தலைவராக கொண்டுவர சிரச பாடுபட்டது. இன்று ஹிருவின் உதவியை பெற அவர் சிரசவை மறந்து விட்டார். டீல் அரசியலை நிறுத்த வேண்டும்.

ரணில் விக்ரமசிங்கவிடம் டீல் அரசியல் கிடையாது. வங்கித் திருடன் என்று விமர்சித்தவர்கள். அவரை தேடி வந்து ஜனாதிபதி பதவியைக் கொடுத்தார்கள். அவரை தோற்கடித்தால் மீண்டும் அவர் உங்களை மீட்க வரப் போவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்றார்.