Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

அமித் ஷாவை பிரதமராக்க பாஜக முயற்சிப்பதாக டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்

மோடி பிரதமர் வேட்பாளர் இல்லையா?

மோடி பிரதமர் வேட்பாளர் இல்லையா?

அமித் ஷாவை பிரதமராக்க பாஜக முயற்சிப்பதாக டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறியுள்ள நிலையில், அதனை அமித் ஷா மறுத்துள்ளார்.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டதை அடுத்து திகார் சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால், டெல்லியில் உள்ள அனுமன் கோயிலில் தனது மனைவி சுனிதாவுடன் சாமி தரிசனம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து, தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஸ்டாலின், மம்தா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றார்.

இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என கேட்டும் மோடியிடம், பாஜகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வியை தான் கேட்பதாக கெஜ்ரிவால் கூறினார்.

பாஜகவின் விதிப்படி, 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதவி வகிக்க முடியாது என்பதால், விரைவில் 75 வயதை எட்டவிருக்கும் பிரதமர் மோடி, அமித் ஷாவை பிரதமராக்க வாக்கு சேகரித்து வருவதாக கூறினார்.

பாஜக மீண்டும் வெற்றி பெற்றால், மோடியே பிரதமராக தொடர்வார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக மீண்டும் வெற்றி பெற்றால், 5 ஆண்டுகளுக்கும் மோடியே பிரதமராக தொடர்வார் என்று கூறினார்.

அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதைப் போன்று, பாஜகவில் எந்த விதியும் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார். பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி தொடர்வார் என்பதில், தங்களுக்குள் எந்த குழப்பமும் இல்லை என்றும் அமித் ஷா திட்டவட்டமாக கூறினார்.