Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

திருமலை காட்டுப்பகுதியில் நடந்த கொடூரம்; கெப் வாகனத்துடன் எரியூட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

.

 

திருகோணமலை – பம்மதவாச்சி காட்டுப் பகுதியில் கெப் வாகனத்திற்குள் எரியூட்டப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் திருகோணமலை -அலஸ்தோட்டம் பகுதியைச்சேர்ந்த 42 வயதான வியாபாரி ஒருவர் என ஆரம்ப கட்ட விசாரணையில் மூலம் தெரிய வந்துள்ளது.

கடந்த 12ம் திகதி கெப் வாகனத்துடன் குறித்த நபர் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த நபரின் வாகனம் அதேநாளில் அதிகாலை 2.40 மணியளவில் வில்கம் விகாரை பகுதியை தாண்டி மொரவெவ பகுதிக்கு செல்வதை பொலிஸார் கண்டிறிந்தனர்.

சிசிடிவி காணொளி மூலம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதக பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த வாகனம் மொரவெவ பிரதேசத்தை தாண்டி செல்லவில்லை என சிசிடிவி மூலம் கண்டறியப்பட்டதை அடுத்து பம்மதவாச்சி பகுதியில் மணல் ஏற்றுவதற்கு பயன்படுத்தும் வீதியூடாக பொலிஸார் சோதனை செய்துள்ளனர்.

இதன் போது காட்டு வழியினூடாக கெப்வாகனம் சென்ற வேளை வாகனத்தின் முன் கண்ணாடி உடைந்து விழுந்த நிலையில் விழுந்து கிடந்ததை பொலிஸார் அவதானித்துள்ளனர்.

அவ்வழியின் ஊடாக தொடர்ந்து சென்று பார்த்த போது EP DAC-9245 என்ற இலக்கமுடைய டாட்டா கெப் வாகனத்தில் எறியூட்டப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் குறித்து தீவிர விசாரணைகளை மொரவெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.