Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

உக்ரைன் மீதான படையெடுப்பு; ரஷ்யா 671,400 துருப்புக்களை இழந்துவிட்டது!

.

உக்ரைன் மீதான படையெடுப்பை தொடங்கியது முதல் இதுரையில் ரஷ்யா 671,400 துருப்புக்களை இழந்துள்ளது என்று உக்ரைனின் ஆயுதப்படைகளின் பொதுப் பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருந்தது.

இந்நிலையில், ரஷ்யா அதன் லட்சக்கணக்காண துருப்புகளையும், ஆயுதங்களையும் இழந்துள்ளதாக க்ரைனின் ஆயுதப்படைகளின் பொதுப் பணியாளர்கள் அறிக்கை ஒன்றில் நேற்று (15) தெரிவித்துள்ளனர்.

அந்த அறிக்கையின்படி, 8,988 தொட்டிகள், 17,939 கவச வாகனங்கள், 26,654 எரிபொருள் தொட்டிகள், 19,430 பீரங்கி அமைப்புகள், 1,231 ஏவுதள ராக்கெட் அமைப்புகள், 978 விமான பாதுகாப்பு அமைப்புகள், 369 விமானங்கள், 329 ஹெலிகோப்டர்கள், 17,019 டப்னெஸ் மற்றும் ட்ரோன்களை ரஷ்யா இழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரஷ்யாவுக்கு சொந்தமான 28 கப்பல்கள் மற்றும் படகுகளும், ஒரு நீர்மூழ்கிக் கப்பலும் உக்ரைனின் தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.