Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மட்டக்களப்பில் சிங்கள மயமாக்கலா?: சதொச விளம்பர பலகையால் குழப்பமடைந்த தமிழ் மக்கள்

.

 

மட்டக்களப்பை சிங்கள மயமாக்கும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக கள்ளியங்காட்டில் அமைக்கப்பட்டுள்ள சதொச விற்பனை நிலையம் செயற்பட்டு வருகின்றதா எனவும் இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடந்தையா என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்புவதுடன், கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

மட்டக்களாப்பு நகருக்கான சதொச விற்பனை நிலையம், கள்ளியங்காடு பகுதியில் உள்ள அரசாங்க களஞ்சியசாலை கட்டிடத்தில் கடந்த வருடம் புதிதாக திறந்து வைக்கப்பட்டது.

இந்த சதொச விற்பனை நிலையத்திற்கு மாத்திரம் சிங்கள எழுத்துக்களால் ஆன விளம்பரப்பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளமைக்கு தமிழ் மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இங்கு வாழுகின்ற மக்கள் தமிழர்களா? சிங்கள மக்களா? தமிழ் பிரதேசமா அல்லது சிங்கள பிரதேசமா அல்லது தமிழர் பிரதேசத்தை சிங்கள பிரதேசமாக மாற்றும் திட்டமா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த செயற்பாட்டிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடந்தையா? இந்த சதோச விற்பனை நிலைய செயற்பாடின் பின்னணியில் யார் உள்ளது? அரசியலா? தமிழ்மக்களை சிங்கள மயமாக்கும் செயற்பாடா? என பொதுமக்கள் குழப்பமடைந்துள்ளனர்.

இந்த விளம்பர பலகையை தமிழில் மாத்திரம் காட்சிப்படுத்துவதற்கு அதிகாரிகள் உடன் கவனம் செலுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.