சுற்றுலா அபிவிருத்தி தொடர்பாக காங்கேசன்துறை கடற்கரைப் பூங்காவிற்கு அரசாங்க அதிபர் களவிஜயம்.
,

சுற்றுலா அபிவிருத்தி தொடர்பாக காங்கேசன்துறை கடற்கரைப் பூங்காவிற்கு அரசாங்க அதிபர் களவிஜயம்.
2025 ஆம் ஆண்டில் நிறைவேற்றவுள்ள சுற்றுலாத்துறை அபிவிருத்தித் திட்டங்களில் உள்ளடங்கப்பட்டுள்ள காங்கேசன்துறை கடற்கரைப் பூங்காவிற்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் (03) களவிஜயம் செய்தார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சினால்
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 131.20 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு அமைய, அத் திட்டங்களில் உள்ளடங்கியுள்ள காங்கேசன்துறை கடற்கரையில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா வின் பகுதி கடுமையான கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டு சிறுவர் பூங்காவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாலும் அவ் விடத்திற்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகைதருவதனாலும் அதனை விரைவாக புனரமைப்புச் செய்வது தொடர்பாக 30.04.2025 ஆம் திகதி மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆராயப்பட்டது.
அதற்கமைய அரசாங்க அதிபர் மேற்படி நிலமைகளை நேரில் சென்று ஆய்வுசெய்தார்.
இவ் அரசாங்க அதிபரின் கள விஜயத்தின் போது தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திருமதி. சி. சுதீஸ்னர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. வீ. சிவகுமார் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.