Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து அரசாங்கத்தின் தீர்மானம்

,

புதிய மசோதா நிறைவேற்றப்படும் வரை தற்போதுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மிகுந்த அவதானத்துடன் முன்னெடுத்துச் செல்லப்படும் என சபை தலைவரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.  பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மசோதா அரசாங்கத்தின் இலட்சியமோ அல்லது கொள்கையோ அல்ல என்றும் சபைத் தலைவர் இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தையும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தையும் பொதுமக்கள் முற்றாக நிராகரிக்கின்றமை மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் நடாத்திய கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது, மாற்றுக்கொள்கை நிலையத்தின் ஆராய்ச்சிப் பிரிவான சோசியல் இண்டிகேட்டர் நடாத்திய கருத்துக்கணிப்பின் மூலம் இது தெரியவந்துள்ளது, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து அறிந்துள்ளதாக 38,5 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர், இவர்களில் 72.6 வீதமானவர்கள்  தாங்கள் அதனை நிராகரிப்பதாக தெரிவித்துள்ள அதே வேளை  நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் குறித்தும்  28.4 வீதமானவர்கள்  அறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர், மேலும்  71,1 வீதமானவர்கள்   அதனை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளனர்,

பயங்கரவாத தடைச் சட்டம் மீதான சிங்கள மக்களின் கருத்துக்கணிப்பு இவ்வாறு இருக்கின்ற போதிலும் இனத்துவசத்தை தூண்டி அவ்வப்போது அதை மிகவும் சுடர் விட்டு எரிய வைப்பது அரசியல்வாதிகளின் கைவந்த கலையாக இருந்து வந்துள்ளது, எனினும் புதிய அரசாங்கத்தின் மீது சில தமிழ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையும் புதிய மசோதா நிறைவேற்றப்படும் வரை தற்போதுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்,,, என்கின்ற வார்த்தையை பார்க்கும் பொழுது "இலவு காத்த கிளிகள்" போல் ஆகி விடுமோ என்கின்ற எண்ணமும் தோன்றுகின்றது,