Breaking News
ரஷ்ய – உக்ரைன் போரில் இலங்கை இராணுவவீரர்கள் கூலிப்படை!
67 மற்றும் 50 வயதுடைய இருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உக்ரைன் – ரஷ்ய போரில் இலங்கை கூலிப்படையினர்; மேலும் இருவர் கைது.
ரஷ்ய – உக்ரைன் போரில் இலங்கை இராணுவத்தின் ஓய்வு பெற்ற வீரர்களை கூலிப்படையாக அனுப்பி ஆள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் மேஜர் ஜெனரல் ஒருவரும் அவருக்கு ஆதரவாக இருந்த முன்னாள் சார்ஜென்ட் மேஜர் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் பகுதியைச் சேர்ந்த 67 மற்றும் 50 வயதுடைய இருவரே நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக, 55 இலங்கையர்களைக் கொண்ட குழுவை உக்ரைனின் மோதல் பிரதேசங்களுக்கு அழைத்துச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கடவட பிரதேசத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த இரண்டு சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வு திணைக்களம் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.