Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ரணில் – பசில் சந்திப்பு: இனி நடைபெறுமா?

.

 

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பிலும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறுவுநர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் ஒவ்வொரு வாரமும் இடம்பெற்று வரும் சந்திப்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதியின் சார்பில் மேலும் பல அரசியல்வாதிகள் கலந்துகொண்டமையே இந்தக் குழப்பத்துக்குக் காரணம்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதைப் பசில் விரும்பவில்லை. இந்தச் சந்திப்பில் பஸிலுக்கும் பிரசன்னவுக்கும் இடையில் வாய்த்தர்க்கமும் ஏற்பட்டது.

இதனால் அடுத்த சந்திப்பு இடம்பெறுமா என்பது சந்தேகமே. அப்படி இடம்பெற்றாலும், வழமைபோல் பசிலும் ரணிலும் மாத்திரமே கலந்துகொள்ள வேண்டும் என்று பஸில் தரப்பு தெரிவித்துள்ளது.