Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கட்சிக்குள் இரு குழுக்கள். அப்படியிருக்க ஒரு குழுவின் தலைவரான சுமந்திரனை அழைத்து இவ்வாறு தான் சொல்வதாகக் கூறுமாறு சம்பந்தன்

புலனத்தின் மூலமாகவோ ,மின்னஞ்சல் மூலமாகவோ சம்பந்தன் தனது கருத்துகளை உறுப்பினர்களுக்கு தெரிவித்திருக்க முடியும். அவ்வாறு அவர் செய்யாமல் சுமந்திரனிடம் கூறினார் என்பது ஏற்புடையதாகுமா ?

உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் இணைந்த வடக்கு-கிழக்குக்கு!
 
உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் இணைந்த வடக்கு-கிழக்குக்கு சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுடன் கூடிய தீர்வு என்பது தான் சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசும் சேர்ந்து இணங்கிக் கொண்ட கடைசி விடயம் " என்று சம்பந்தன் கூறியதாகவும் இதை வருகின்ற தமிழரசுக்கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் அனைவருக்கும் தெரியப் படுத்துமாறு சுமந்திரனிடம் சம்பந்தன் கூறியதாக மின்னல் தகவல் வெளியிட்டுள்ளது. மின்னல் அச்சமயம் சுமந்திரனுடம் சம்பந்தனின் வீட்டில் நின்றாரா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.
கட்சிக்குள் இரு குழுக்கள். அப்படியிருக்க ஒரு குழுவின் தலைவரான சுமந்திரனை அழைத்து இவ்வாறு தான் சொல்வதாகக் கூறுமாறு சம்பந்தன் கூறுவதை யார் ஏற்பார்கள்,நம்புவார்கள்.புலனத்தின் மூலமாகவோ ,மின்னஞ்சல் மூலமாகவோ சம்பந்தன் தனது கருத்துகளை உறுப்பினர்களுக்கு தெரிவித்திருக்க முடியும். அவ்வாறு அவர் செய்யாமல் சுமந்திரனிடம் கூறினார் என்பது ஏற்புடையதாகுமா ? ஆனால் அந்தப் பத்திரிகைக்காரன் பக்கத்தில் இருந்து பார்த்துக் கேட்டதாகத் தான் அதை எழுதியுள்ளார்.
இது உள்கட்சிப் பிரச்சினை அது போகட்டும். இங்கே உள்ளக சுயநிர்ணயம் சமஷ்டி என்று கூறும் சம்பந்தன்பதின்மூன்றை நடைமுறைப்படுத்துங்கள் என்று கடிதங்கள் எழுதிக்கொண்டிருப்பது ஏன்? பதின்மூன்று சமஷ்டி ஆகாதே. அது முழுக்க முழுக்க ஒற்றையாட்சிக்குட்பட்ட அரசியல் யாப்பின் பதின்மூன்றாவது திருத்தம் தானே. பதின்மூன்றை நடைமுறைப்படுத்துங்கள் என்பதன் மூலம் ஒற்றையாட்சியை ஏற்பதாகத் தானே பொருள்படும். ஏன் சர்வதேசமும் இலங்கை அரசும் ஏற்றுக்கொண்ட உள்ளக சுயநிர்ணய உரிமையுடனான சமஷ்டியை நடைமுறைப்படுத்துங்கள் என்று உலக நாடுகளுக்குக் கடிதம் எழுதவில்லை. அது மட்டுமல்ல மைத்திரி-ரணில் ஆட்சியின் பொது எக்கியராஜ்ஜே என்று ஒரு சிங்கச் சொல்லைத் தமிழுக்குள் புகுத்தி ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை ஏற்படுத்த முயற்சித்தது ஏன்?
கட்சிக்குள் பிளவு வழக்கு மன்றில் கட்சி நிறுத்தப் பட்டுள்ளது இவற்றைத் தீர்க்கச் சம்பந்தன் என்ன நடவடிக்கை எடுத்தாரோ தெரி யவில்லை. ஆனால் மக்களை ஏமாற்றுவதற்காக உள்ளக சுயாட்சி,சமஷ்டி இவற்றை வைத்து சனாதிபதி வேட்பாளர்கள் எவ்வாறு தமது தேர்தல் கொள்கை விளக்க அறிக்கையில் கூறுகிறார்களோ அவர்களுடம்ன் பேசி யாருக்கு வாக்களிப்பது என்று தீர்மானிக்கப் போகிறாராம்.