Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஜனாதிபதி, பிரதமரின் தீபாவளி வாழ்த்துச் செய்திகள்

.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தமது வாழ்த்துச் செய்திகளை பகிர்ந்துள்ளனர்.

அஞ்ஞானத்தின் இருளைப் போக்க மெய்ஞ்ஞான ஔியால் மட்டுமே முடியும் என்ற ரீதியில் தீபங்களை ஏற்றி இலங்கையர்களாக புதிய புரட்சிக்கு வழிவகுப்பதாக இம்முறை தீபாவளி பண்டிகையை கொண்டாடுவோம் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கேட்டுகொண்டுள்ளார்.

தீபாவளி பண்டிகை வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

கலாசார பல்வகைத்தன்மையின் அழகை மெருகூட்டும் வகையில், ஒருவருக்கொருவர் கௌரவம், ஏற்றுக்கொள்ளல் மற்றும் சகோதரத்துவம் என்பவற்றுக்காக கரங்களை நீட்டுவோமெனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

பிரித்து வலுவிழக்கச் செய்யப்பட்ட இலங்கை தேசத்தை பிளவுபடாமல் வலுவாக முன்னோக்கிக் கொண்டுசெல்ல வேண்டிய காலம் உதயமாகியுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அநீதி, வேறுபாடுகள், பிளவுபடுத்தல், வெறுப்புப் பேச்சுகள், வன்முறைகள் என்பதை முழுமையாக துடைத்தெறிந்து சமூகத்தில் வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்வோர் மற்றும் வரப்பிரசாதங்கள் கிடைக்காதவர்கள் என்ற வேறுபாடுகளை முழுமையாக இல்லாது செய்ய முன்வருமாறும் ஜனாதிபதி கேட்டுக்கணெ்டுள்ளார்.

இந்த தீபாவளி பண்டிகையில் வளமான நாடு மற்றும் அழகான வாழ்க்கை என்ற எதிர்பார்ப்பு நனவாக வேண்டுமானால், அதற்கான கலாசார, அரசியல் ரீதியான மனப்பாங்கு மாற்றமும் அவசியம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சுதந்திரத்தின் பின்னர் இருளிலிருந்து வெளிச்சத்தை தேடிவந்த இலங்கை மக்கள் தற்போது புதிய எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இத்தனை நாட்களாக இலங்கையை ஆட்சி செய்தவர்களால் முடக்கி வைக்கப்பட்டிருந்த பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை மலரச்செய்யும் மாற்றத்திற்கான யுகத்தை தாம் ஆரம்பித்துள்ளதாகவும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

 

தீபாவளி நாளில் இல்லங்களை ஒளிரச் செய்வது மட்டுமல்லாமல் நீதி, கருணை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் ஆழமான உணர்வை தம் இதயங்களில் ஒளிரச்செய்ய வேண்டுமென பிரதமர்,  கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

தீபாவளி வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

அனைவரும் சுதந்திரம், கண்ணியம் மற்றும் உரித்தை அனுபவிக்கக் கூடிய ஒரு உலகைக் கட்டியெழுப்ப அனைவரும் மீள சிந்திக்க வேண்டிய தருனம் இதுவாகுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

'வளமான தேசம் - அழகான வாழ்க்கை'  என்ற  தமது அரசியல் கொள்கையின் மூலம் அனைவரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை இலக்காகக் கொண்டு செயற்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீபாவளி அனைவரது வாழ்க்கையிலும் ஒளியையும் மகிழ்ச்சியையும் புதுப்பித்தலையும் தரக்கூடியதாக அமையுமென்பதுடன், அனைவருக்கும் மகிழ்ச்சியான, அர்த்தமுள்ள, அமைதியான தீபாவளி வாழ்த்துகளை தெரிவிப்பதாக பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.