Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

திரையில் நாடந்த காவியம் அல்ல எங்கள் ஈழத் தரையில் நடந்த வரலாறுகள்!

ஈழத் தமிழர் வரலாற்றை எள்ளி நகையாடும் இனத் துரோகிகளுக்கு இது சமர்ப்பணம்.

இந்த உலகத்தில் ஒரு தந்தை தன் மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வார்,
விளையாட அழைத்துச் செல்வார்,
படிப்பு முடிந்ததும் வேலைக்கு அழைத்துச் செல்வார்,
மிக மகிழ்ச்சியாக மணமேடைக்கு அழைத்துச் செல்வார்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் தன் மகளை பார்த்து பூரித்துப் போவார்.
இங்கே வரலாறே வேறு! ஈழத்து தகப்பன் தன் மகளை எவ்வளவு அருமையாக இன விடுதலைக் களத்திற்கு இன்முகத்தோடு அழைத்துச் சொல்லுகிறார்.
இவ்வளவு பெருமைகள் இருப்பதால் தான் அனு தினமும் ஈழ நிலத்தின் வீர வரலாற்றை நாங்கள் பெருமையோடு பேசுகின்றோம்.
அதன் வாயிலாக அடிமைப்பட்டு கிடக்கும் தமிழ் சமூகத்தின் விடுதலை எனும் லட்சியம் பிறக்கும் என்றும் நம்புகின்றாம்.
இது திரையில் நாடந்த காவியம் அல்ல.
எங்கள் ஈழத் தரையில் நடந்த வரலாறுகள்.
ஈழத் தமிழர் வரலாற்றை பேசுவதை எள்ளி நகையாடும் எங்கள் இனத்தின் துரோகிகளுக்கு இது சமர்ப்பணம்.
இன்று ஈழத் தமிழர் வரலாற்றை கொச்சைப் படுத்துவதும் திரிபுபடுத்துவதும் என எதிரிகளின் வேண்டுதலுக்கு, துரோகிகள் திரைப்படமெடுப்பதும் காட்சியமைப்பதுமாக திரைப்படம் என்னும் போர்வைக்குள் தமது வன்மத்தை புகுத்திவருகின்றனர்.