Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

செப். 17 குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும்; அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தேர்தல்கள் ஆணைக்குழு!

.

”செப்டெம்பர் 17 ஆம் திகதிக்குப் பின்னர் பொருத்தமான ஒருநாளில் ஜனாதிபதித் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும்” எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம் .எல். ஏ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” தேர்தல்கள் ஆணைக்குழுவில் 5 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக சமூகத்தில் பாரிய எதிர்ப்பார்ப்பு காணப்படுகின்றது.

இந்த நாட்டில் பல தடவைகள் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றுள்ள போதிலும் இம்முறை பாரிய எதிர்ப்பார்ப்பு காணப்படுகின்றது.

அரசியலமைப்பின் பிரகாரம் செப்டெம்பார் 17 முதல் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே 63 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் திகதியை தீர்மானிக்கையில் வேட்புமனுதாக்கல் செய்வது முதல் பிரசாரங்களை மேற்கொள்ள வேட்பாளர்களுக்கு காலஅவகாசம் வழங்க வேண்டும்.

தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகள் முன்னாயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கும் கால அவகாசம் தேவைப்படுகின்றது. இவை அனைத்தையும் கருத்திற்கொண்டே திகதி தீர்மானிக்கப்படும்.

இந்த மாதம் நிறைவடைவதற்குள் தேர்தல் நடத்தப்படும் திகதியை நாம் அறிவிப்போம். தேர்தல் திகதியை தீர்மானிப்பதற்கு வேறு எந்த இடையூறுகளும் இல்லை. தேர்தல் திகதியை தீர்மானிப்பதில் நாம் பாரபட்சமாக செயற்படவில்லை. அரசியலமைப்பின் பிரகாரமே செயற்படுவோம்.செப்டெம்பர் 17 ஆம் திகதியின் பின்னர் பொருத்தமான ஒருநாளில் தேர்தல் நடத்தப்படும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை அறிவிக்கும் அதிகாரம் இன்று நள்ளிரவுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெறுகின்ற நிலையிலேயே இன்றைய தினம் குறித்த விசேட ஊடக சந்திப்பு இடம்பெற்றிருந்தது.