Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

14 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியைக் கைப்பற்றியது தொழிற்கட்சி: பிரதமராகிறார் கீர் ஸ்டார்மர்

.

 

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட கீர் ஸ்டார்மர் வெற்றியீட்டியுள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் 650 தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில், ஆளும் கட்சியான கன்சர்வேட்டிங், தொழிலாளர் கட்சி, லிபரெல் டெமோக்ராட்ஸ் கட்சி ஆகியவை வேட்பாளர்களை நியமித்தன.

இதில் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிங் கட்சி கடுமையான தோல்வியை சந்திக்கும் என்றும் தொழிற்கட்சி பெரும்பான்மை வாக்குகளுடன் ஆட்சியமைக்கும் என்றும் கூறப்பட்டு வந்தது.

வாக்கு எண்ணிக்கையில் கீர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிற்கட்சி முன்னிலை வகித்தது.

பெரும்பான்மைக்கு தேவையான 326 இடங்களுக்கும் மேலாக தொழிற்கட்சி வென்றது.

இதன்படி தொழிற்கட்சி வெற்றி பெற்றிருக்கும் நிலையில், கீர் ஸ்டார்மர் பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்கவுள்ளார்.

சுமார் 14 வருடங்களின் பின்னர் தொழிற்கட்சி பிரித்தானியாவின் ஆட்சியைப் பிடித்துள்ளது.

பிரக்சிட் எனப்படும் ஐரோப்பிய சங்கத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதன் பின்னர் நடைபெற்ற முதல் தேர்தல் இதுவாகும்.

16 கோடி வாக்காளர்களைக் கொண்ட பிரித்தானியாவில் வாக்குச் சீட்டு முறையின் அடிப்படையில் தேர்தல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.