Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

நாமலுக்காக களமிறங்கிய மஹிந்த: பொதுஜன பெரமுனவின் வெற்றியை நோக்கியப் பயணம்

.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் மாவட்ட மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரதான பொதுக்கூட்டங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்கவுள்ளார்.

மாவட்ட மட்டத்திலான பிரதான மக்கள் பேரணிகளின் தொடர் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள தொகுதி மட்ட பொதுக்கூட்டங்களுக்கு மேலதிகமாக மாவட்ட மட்ட பொதுக்கூட்டங்களும் இடம்பெறவுள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு முக்கிய பொதுக்கூட்டம் நடத்தப்படும் மேலும் சில மாவட்டங்களில் இரண்டு முக்கிய மாவட்ட பொதுக்கூட்டங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.