Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

கனடாவில் தமிழர் ஒருவருக்கு கிடைத்த வெற்றி: அதிஷ்டலாப சீட்டிழுப்பில் ஒரு மில்லியன் டொலர் பரிசு

.

கனடாவில் தமிழர் ஒருவருக்கு அதிஷ்டலாப சீட்டிழுப்பில் ஒரு மில்லியன் டொலரை வெற்றிகொண்டுள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக லாட்டரி விளையாடிவரும் ஜெயக்குமார் ராஜரத்தினம் என்பவர் ஓகஸ்ட் 14ஆம் திகதி லோட்டோ 6-49 சீட்டிழுப்பில் ஒரு மில்லியன் டொலரை வெற்றிபெற்றுள்ளார்.

பிராம்ப்டன் நகரை சேர்ந்த ஜெயக்குமார் ராஜரத்தினம் என்பவர் அதிஷ்டலாப சீட்டிழுப்பில் இந்தப் பரிசு தொகையை வெற்றி பெற்றார்.

Etobicoke நகரில் உள்ள Woodbine Racetrackகில் அவர் தனது வெற்றி சீட்டைக் கொள்வனவு செய்துள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“முதலில் நான் 1,000 டொலரையே வென்றேன் என்று நினைத்தேன். நான் திரையை உன்னிப்பாகப் பார்த்தேன், நான் உண்மையில் எவ்வளவு வெற்றி பெற்றேன் என்பதை விரைவாக உணர்ந்தேன்.”

“நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன், நான் உறைந்து போனேன். இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். தனக்கு கிடைத்த அதிஷ்டத்தை மனைவி மற்றும் மகள் தொடங்கி தனது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டேன்.

“என்னை விட அவர்கள் உற்சாகமாக இருந்தார்கள் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

இந்தப் பரிசு தொகையின் மூலம் தனது வீட்டின் அடமான கடனை செலுத்தி முடிக்க முடிவு செய்துள்ளதாக ஜெயக்குமார் ராஜரத்தினம் தெரிவித்துள்ளார்.